Saturday, December 25, 2021

நெருக்கம்!!

எது நெருக்கம்??
அருகில் அமர்ந்து 
இருகைகளை இருக்கிப்பிடிப்பது மட்டுமா???
அல்ல 
அருகாமையில் இருந்தாலும்
அருகில் அமர்ந்து இருகைகளையும்
இருக்கிப்பிடித்து 
உனக்காக நான் இருக்கிறேன்
என்பதை உணரவைப்பதே நெருக்கம்!!!

Monday, December 13, 2021

அப்பா

அழைத்த ஒருக்குரலில் வருவதும் 
ஆசைப்பட்ட அனைத்தையும் வாங்கித்தருவதும் !!
அப்பவும் இப்பவும் எப்பவும்
      அப்பா தான்!!

Saturday, December 11, 2021

சுயமரியாதை

உனக்காகவே இருந்தாலும் 
உன் சுயமரியாதையை இழக்காதே !!

Saturday, December 4, 2021

தவிப்பிலும் நீயே!!

தவிப்பதும் தாங்குவதும் நீ என்றால்
தவறி விழுகவும் தயக்கமில்லை !!

Wednesday, November 10, 2021

Tuesday, November 2, 2021

தடம்

தயக்கம் வேண்டாம்
தன்னார்வம் போதும்
தடைகளை மீறி தடம் பதிக்க 
தங்கப் பதக்கத்தை நீயும் பிடிக்க!!

Monday, October 18, 2021

என்னவோ!!

நான் ஆசைப்படும் அனைத்தும்
நீ தருவதால் என்னவோ 
எண்ணவனே என் ஆசையாக நீ இருக்கிறாய்!!

Sunday, October 10, 2021

மறவாதே!!

உயரத்தை அடைந்தாலும் 
அடையக்காரணமாய் இருந்த உள்ளத்தை‌ மறவாதே !!!

Thursday, October 7, 2021

தனித்திமிர்

தனியாக நடந்தாலும்
தனிதிமிறுடன் நட !!
தாழ்ந்தவன் நீ என்றால்
துனிவுடன் சொல் !!
ஆம் நான் தாழ்ந்தவனே 
ஆனால் யாரையும் வாழ்த்திப் பேசாதவன் என்று!!

Tuesday, October 5, 2021

சிறு புன்னகை!!

சீரற்ற வாழ்க்கையும் சிறப்பாக மாறிவிடுமாம் சிறு புன்னகையுடன்  கடந்து சென்றால்.

Sunday, September 19, 2021

தூரமே!!

நீ வேண்டாம் என்றால் 
தூரம் செல்வேனே தவிர 
ஒருபோதும் உனக்கு பாரமாகாமாட்டேன் !!

Friday, August 13, 2021

முடியும்!!

உன்னால் முடியும் என்று முடிவெடுக்கும்
முன்பே உன்னால் முடியுமா என்ற கேள்விக்கு உண்மையில் முயன்றால் முடியும் என்று விடைக்கூறு

Tuesday, August 10, 2021

விட்டுவிடு

உன்னால் மணக்க முடியும் என்றால் மட்டுமே
உன் மனங்கொடு !!
இல்லையெனில்
விட்டுவிடு பாவம் ‌
இவ்வுலகில் பிணங்களின்
எண்ணிக்கையாவது குறையட்டும்

Monday, August 9, 2021

காதல் கண்ணியம்

இவ்வுலகில் அனைவரும் யாரோ ஒருவரால் நேசிக்கதான் படுகிறார்கள் தெரிந்தோ தெரியாமலோ??-ஆனால்
உன்னை நேசிக்கவா என்று நீ என்னிடம் கேட்டப்போது என்னை கேட்க்காமலே என் மணம் ஆம் என்றது!!-காரணம் காதல் மட்டுமல்ல
காதலுடன் கலந்த உன் கண்ணியமே!! 

Tuesday, July 27, 2021

அழகா!!

அழகு என்றாலே 
நீ மட்டுமே!!
அழகன் என்றாலே
நீ மட்டுமே!!
என்றும் என் வாழ்வில்

காதல் போதும்

காதல் போதும் 
ஆமாம் உன் காதல் போதும்
காலம் முழுவதும் கலித்திடுவேன்
உன்னால் காதலிக்கப்பட்டேன் என்றே!!

எட்டிப்பிடிப்பேன்

எட்டிப்பிடிக்கப் போகிறேன்
எட்டாத உன்னை !!
வெற்றியே நினைவில் கொள்
நானும் உன்னை ஒரு நாள் 
அடைவேன் என்பதை!!

நாம்

நீயா நானா 
என்பதை விட்டுவிடுவோம்
நாம் என்றே
இனிக்கூறி பழகுவோம்!!!


ஆருயுரே!!

என்னைக் கொள்ள
ஆயுதம் வேண்டாம்
நீ பேசா ??
அரைநொடி போதும்!!
நான் மரணித்து விடுவேன்
என் ஆருயுரே!!

ஆசை

ஆசை!!
நீ விரும்பும் ஆசையாக இருக்க ஆசை

Wednesday, July 14, 2021

போதை

நீ இல்லாதபோதே
உன்மேல் எனக்கிருந்த போதையறிந்தேன்!!

நிலவே வாராயோ!

இருளில் இருந்த போதே 
நிலவின் அருமை அறிந்தேன் !!
தனிமையில் தவித்துப் போதே தவிப்பின் வலியை அறிந்தேன்!!
கனவே என்றாலும் காதலுடன் நீ காத்திருப்பதாய் நானே கற்பனை காவியம் ஒன்று படைத்தேன் ..
என் இருளின் நிலவே
தவிப்பில் வலியைப்போக்குபவளே
கனவில் மட்டும் இல்லாமல் நிஜத்திலும் காதல் காவியம் படைக்க ஆசைப்படுகிறேன் உன்னோடு !
ஒருமுறை வாய்ப்பு தாராயோ !!
என் தனிமையின் இனிமையே 
என்னை ஆளும் பெண்மையே

Sunday, July 4, 2021

கண்ணே கேட்பாயோ??

ஆணோ பெண்ணோ
இருவரும் சமம் என்ற 
உலகத்தில் வாழ்கிறோம்
ஆனால் பெண் என்றுமே 
பூட்டியே வைக்கப்படுகிறாள் !!
காரணம் அவளிடம் மட்டுமே 
கற்ப்பிருக்கிறது என்ற 
மூடநம்பிகையால் !!!
ஆண்களுக்கும் கற்பென்ற ஒன்று
உள்ளது !!! 
முகம்த்தெரியா பெண்ணை எவன்
தன் தாயாகவும் தங்கையாகவும் 
பார்த்து அவர்களை பாதுக்காகிறானோ 
அவன் கற்புடையவன்!!!
காதலியாக இருந்தாலும் 
கற்பை பறிக்காமல்
கற்பை பறிப்போகாமல் 
காக்கிறானோ அவன் கற்புடையவன்
காலம் மாறலாம் , கலாச்சாரம் மாறலாம் ஆனால் இன்னமும் 
பெண்கள் மற்றும் அவர்களின் 
பெற்றோர் பயந்தே வாழ்கின்றனர்
காரணம் ஆணுக்கும் கற்ப்பு என்ற
ஒன்று இருக்கிறது  என்பதை மறந்து !!
பெண் பூப்போல மென்மையானவள் என்பதை மறந்து
அவளை  பூவின் நாறைப் போல்
கருதி அவளை வருத்தி 
வாழ்க்கையவே அளித்துவிடுகிறார்கள்
இந்த கற்பற்ற காட்டுமிராண்டிகள்!!
உடலாலும் வருந்தி உயிர்ப்போகும் 
துயரையும் பெற்று இறுதியில் 
உயிரையும் விடுகிறாள்
இந்த அப்பாவி பெண் !!!
சட்டங்கள் பல இருந்தாலும்
கர்ப்பிளந்தவள் என்ற பட்டம் 
மட்டும் பெண்ணிருக்கு தருகிறது
இந்த இரக்கமற்ற உலகம்!!!
இந்த இழிவு நிலை எப்போது 
மாறுமோ-இப்படிக்கு
மனத்தில் தயிரியமிருந்தும்
தயங்கும் பெண் ..
காரணம் எனக்குப்பிடித்ததை செய்தால் தட்டிவிடும் உலகம்
என்பதால்!!


Thursday, July 1, 2021

வரமே

வாழ்வோ சாவோ 
இனி எல்லாம் உன்னோடு தான் 
என்று ஒருவர் கூறி உடன் இருப்பதெல்லாம் வரமே!!

Saturday, June 19, 2021

கனா காணவா??

கனா காணவா ??
கடலோரத்தில் நீயும் நானும்
கரையின் ஓரத்தில் நம் பாதமும்
நினைந்தப்படி நினைத்து உறங்கச்சொன்னாய்!!!
அப்போதே தெரியவில்லை
என்னோடு நீயிருப்பாய்
என்பதை உணரக்கூறவில்லை
என்னோடு நீ இருந்நாய் 
என்பதை உணர்த்தவே 
காணச் சொன்னாய் என்பதை !!
அதேப்போல் நானும்
நினைத்தே தினமும் கானாத
உன்னை கனவில் 
காணத் தவிக்கிறேன்!!!

Friday, June 18, 2021

மீட்டுக்கொள்ளவா??

மறக்க நினைத்தும் மறக்க முடியாத ஞாபகமாய் மாறிபோனாயே!!!
மறுமுறை ஒரு வாய்ப்பு தாராயோ???
உன் மனுத்துக்குள் இருக்கும் என்னை மீட்டு எடுத்துக்கொள்கிறேன்
அப்போதாவது உனக்கு புரியட்டும் 
மீட்டெடுத்தாலும் மீண்டும் உன்னிடமே வருவேன் என்று!!

Tuesday, June 15, 2021

கஷ்டங்கள்

கடல் அலைப்போல தான்
கஷ்டங்களும் கரைச் சேரும் வரை
நம்மை அடித்துக் கொண்டே இருக்கும் !!

Wednesday, June 9, 2021

காதலின் சுகம் :
               காத்திருப்பது !!
காதலின் வலி :
               காத்திருப்பது !!

மன்னிக்கவும்

இனையத்தில் உன்னை மறுத்துவிட்டேன் ஆனால் 
இதயத்தில் மறுக்க மறந்துவிட்டேன்

Sunday, May 30, 2021

நாம்

நீயா நானா 
என்பதை விட்டுவிடுவோம்
நாம் என்றே
இனிக்கூறி பழகுவோம்!!!


Saturday, May 29, 2021

உன் செல்லப்பிள்ளை நான்!!!

தங்க தமிழே என் தாய்மொழியே
செம்மொழியே என் செல்லமொழியே
எல்லோரும் என்னை பிரிந்து சென்ற பிறகும் என்னை தினமும் பிரியாமல் செல்லங்கொஞ்சி கவிபாட வைக்கிறாயே ஏன்???
ஒருவேளை நானும் 
உன் செல்லப்பிள்ளை தானோ???

Friday, May 28, 2021

அன்பே வா

வரும்முன் காப்பது சிறந்ததாமே??
அதனால் தான் அழைக்கிறேன்
வா அன்பே உயிர் பிரியும் முன்
இருவரும் உயிருக்கு உயிராக 
வாழ்ந்துவிட்டு சென்றுவிடலாம்!!

Wednesday, May 26, 2021

நொடியே!!

நீ அற்ற நொடி எல்லாம்
நிற்கக்கூடாதா என்றே நினைக்கிறேன்
காரணம் நீயின்றி நொடிக்கூட 
யுகமாக கொள்ளுகிறது என்னை!!🥺

தொற்றுபோனதே!!

தாயின் கருவறையும்
சற்றுத் தோற்றேபோனது
தங்கமே உன் தோளில் சாய்ந்த 
அந்த நொடிகளில்!!

Tuesday, May 25, 2021

உன்னை காணாது இங்கு நான் இல்லையே

பகல் முழுவதும் பார்க்காமல்
உன்னிடம் சண்டையிட 
முடியும் என்னால் 
ஆனால் என்ன செய்வது
இரவில் உன் இருவிழிகளை 
பத்து நிமிடம் பார்க்காமல் 
உறங்க என் கண்கள்கூட மறுக்கிறது
காரணம் உன் மீது நான் கொண்ட காதல் அல்ல என் மீது நீ கொண்ட காதலே!!

காதலிக்கலாமா???

காதலிக்கலாமா???
கண்டவரையல்ல‌ 
கண்டிப்பவரை !!
ஏன் எனில் அதுவே 
நிலையான காதல்!!...
கண்டிப்பவரா அவர் யார்??
நம் பெற்றோரே!!!❤️

Saturday, May 22, 2021

எப்போதோ

இனைய முடியாத தூரத்தில் 
இருந்தாலும் இனையத்தில்
உடன் இருக்கிறாய் நீ !!
இதயத்தில் இனைந்து வாழ்கிறாய்!!
 இனி யாராலும் உன்னை ஈர்க்க முடியாது ஏனெனில்
என் கண்கள் உன்னை 
ஈர்த்துவிட்டது எப்போதோ!!!

Tuesday, May 11, 2021

இருக்கும் வரை!!!

அன்போ பாசமோ
ஆசையோ நேசமோ
அக்கறையோ ஆறுதலோ
எதுவானாலும் அளவோடு வை!!
எதுவுமே இருக்கும் வரை தான்!!
இல்லாமல் போனால் இருப்பதோடு
வாழ்க்கையை கடந்து செல்வார்கள்!!


Monday, May 10, 2021

உன்னவன்

என்னவள் நீ  என்றபோது
கிடைத்த ஆனந்தத்தை விட
உன்னவன் நான் என்கிற போது
கிடைக்கின்ற ஆனந்தத்துக்கு 
அளவே இல்லை என் அழகியே !!
            -இப்படிக்கு உன்னவன்!!


என் காதலே!!

இதயத்தில் நீ இல்லை
இதயமாகவே நீ இருக்கிறாய்!!!

Saturday, May 8, 2021

Ritu and Rana intro !!❤️

Let's get into a small dream love story of a girl about her dream boy.Every unmarried girl is waiting for a Prince who is ready to do anything for his girl as they hear the story from grandparents in their childhood days ,it's not a big deal ,because everyone can dream and swim in their own dream !!..
       Here we come to the story of Ritu and Rana .How they started and lived their life.
The thing mentioned all here is imagination and creativity of a little author..
       Ritu is a girl from a standard and understanding family and Rana is from strict and typical family..
 Rana is elder than Ritu ,but Ritu is brilliant than Rana.Ritu was sweet natured and friendly one  to all and Rana was a polite and calm one to all.Ritu was a girl  so bold and energetic one who  is ready to face everything in the world but Rana was a boy who struggles to  face a small issues.
Let's see how they lead their life in a upcoming episodes...
Thank you readers for red it !!!
  

Wednesday, May 5, 2021

உணர்வே🥳

உயிர் தந்தவர்களும்
உடன் பிறந்தவர்களும்
உடன் இருப்பவர்களும்
 உற்றார் உறவினர்களும்
உன்னை ஏசினாலும்
உன்னை பற்றியும்
உன்னை சுற்றியும்
உனக்காக உள்ளத்தையும்
உனக்காக உயிரையும் 
கொடுக்க ஒரு உயிருக்கிறது என்று
உணருவதெல்லாம் வரமே!!!




Friday, April 30, 2021

தம்பியே!!

வரமாய் வந்த வைரமே!!
என்னை தாங்கிப் பிடிக்கும் தங்கமே!!
தம்பி நீ இருக்கையில் 
வேறென்ன வேண்டும் எனக்கு??
வளரும்போதே என்னையும் உடன் வளர்த்த உடன்பிறப்பே!!
உயிர் இருக்கும் வரை 
உன்னை நம்பியே வாழ்வேன் என் தம்பியே!!

உனக்காக

இன்று இருப்போர்
நாளை இல்லை
ஆனால் இருக்கும்வரை
உனக்காக ,உனத்தாக,
உன் உரியவராக இருக்கவே
பேராசைக்கொள்கிறேன் நான்!!

மதிப்பு

உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ
உன்னை மதித்தாலும் மதிக்காவிட்டாலும்
நீ மத்தித்துவிடு மரியாதைக்கொடுத்துவிடு!!

Monday, April 26, 2021

நீயா நானா

அழைப்பும் குறுஞ்செய்தியும்
சண்டையிடுகிறது !!
நீயா நானா என்று ??
வராத என் அழைப்பேசிக்குள்!!

Sunday, April 25, 2021

நீ

நெஞ்சில் நீ
நினைவில் நீ
எனக்குள் நீ -என்றே நான்!!




எனக்கே

காதலியோ கட்டிய மனைவியோ!!
யாராக இருந்தாலும் எண்ணங்கள்
ஒன்று தான்-தனக்கானது தனக்கு மட்டுமே -என்பதே!!!

மனமே மனமே

மனமே மனமே!!!
மண்டியிட ஆசை 
உன்னிடம் மட்டும்!!!
மறக்காமல் என்னுடன் 
நீ மட்டும் இருப்பதால்!!

பேனா

வர்ணிக்க நீ வா!!
வாசிக்க நான் வருகிறேன்!!
வார்த்தைகள் வாடியது!!
சொற்கள் சோர்ந்தது 
என்றது என் பேனா!!!!






Thursday, April 8, 2021

வரிகளே வரிகளே

வரிகளே வரிகளே
என்னை மன்னித்து விடுங்கள்!!
உங்களை கவனிக்காமல் விட்டது 
என் தவறு தான்!!!
உள்ளமும் சரி உள்ளங்கையும் சரி
நீங்கள் வரமாடீர்களா என்றே
இருக்கிறது?????
உன் வீட்டுப் பிள்ளை தானே நான்!!
என்னை மன்னித்து விடுங்கள்
நாம் வழக்கம்போல் வாசகர்களுக்கு
கவிகள் வாசிக்க வழங்குவோம்!!


Tuesday, March 30, 2021

என் என்னவளே

என் இதய மெழுகு பொம்மையே!!
நான் தூரமாக செல்வதற்கு முன்
என் தாராமாக நீ வருவாயா??
உயிர்விடும் முன் ஒருமுறையாவது 
உன்னவனாக இருந்து போக ஆசை
என்றான்  மீசை வைத்த இராணுவன் ஒருவன்!!!

Friday, March 26, 2021

தாரமே தாரமே

தாய் வேண்டாம்
தந்தை வேண்டாம்
தமயன் வேண்டாம்
தங்கை வேண்டாம்
நீ கட்டிய தாலிப் போதும்
என்று வரும் தாரத்திடம் 
தாழ்ந்துப்போக வேண்டாம் 
தாழ்த்தி பேசாமலே இரு
அதுவே போதும் !!!

எண்ணுவாயா??

என்னை எண்ணாமல் சென்ற
என் என்னவளே!!!
என்றாவது என்னை எண்ணுவாயென்றே 
என்றும் உன்னை எண்ணியே
காத்திருக்கிறேன்??

Sunday, March 21, 2021

என் கவியுக கவிஞனே

என் கவியுக கவிஞனே!!!
மண்ணைவிட்டு விண்ணையால
நீ சென்றுவிட்டாய்??
ஆனால் உன் வரிகளோ என்னை ஆள்கிறது!!!
நீ எழுதிய ஒவ்வொரு பாடலும்
உன்னையே பாடுகிறது!!
கவிஞனே !! எப்போது நீ வருவாய் 
வந்து உன் ஆனந்தயாழை மீண்டும் தீட்டமாட்டாயா என்றே இருக்கிறது
என் நெஞ்சம் ???
எளிமை கவிஞனே !!
எழுந்து வா !!!
மீண்டும் எழுத வா!!
என் கவியுக நாயகனே !!!!
முத்து முத்தாக கவியெழுதிய 
நா.முத்துகுமாரே வா !!!
இனைந்து கவி எழுத 
ஆசைப்படுகிறேன் வா!!!

Saturday, March 20, 2021

இடம் வேண்டும்

உன் இனையத்தில் இடம் வேண்டாம் 
உன் இதயத்தில் இடம் வேண்டும் காரணம் கருவியில் உன்னோடு இல்லாமல் தாயின் கருவில் இருந்ததைப்போல் உணருவேன்!!!அதற்கே😝

தமிழ்

கவிகளே என் உலகமாகிப்போனதே!!!வரிகளே என் வழித்துனையாகி நிற்கிறதே-காரணம் நான் தமிழ் மீது கொண்ட பற்றோ??அல்ல தமிழ் மீது கொண்ட பக்தி!!❤️.......✍️

யார் சிறந்த கவிஞன்

காகிதத்தில் மையால் எழுதுபவன் எல்லாம் கவிஞன் அல்ல
பொய்களைத் தவிர்த்து மெய்கள்
கோர்த்து வரிகளால் வருணிக்க செய்பவனே ஒரு நல்ல கவிஞன்!!

Thursday, March 18, 2021

என்னவன்

உன்னைப் பற்றி கவி 
கேட்டாய் என்னிடம்!!
வரிகளோ வரவில்லை
காரணம் தயக்கமா ??
அல்ல- உன்மீது நான் 
கொண்ட மயக்கம்!!!
அதனால் என் என்னவனே!!
என்னைப்பற்றி சொலென்று 
கேட்பதவிட்டுவிடு -ஏன்னெனில்
எண்ணிலடங்காத‌ உந்தன் அழகையும் அறிவையும்
என்னால் எப்படி எட்டு வரிகளில்
எழுதி சொல்வது உனக்கு???


Wednesday, March 10, 2021

🤭🤭

வானத்து பொண்நிலவே
 என்  பக்கத்துவீட்டுப் பெண்நிலவே!!
வாடுகிற பூக்கூட வாடமல் இருக்கிறதே  நீ வாரிவைத்தால்
மட்டும் !!
வண்ணத்துப்பூச்சியெல்லாம் வரம் 
வாங்கி நிக்குதடி உன் கரம் மேல் அமற!!!!!!
விழியோரத்தில் நீ வைத்த 
மையுக்குள் விழுந்தேனடி 
என்னோடு நீ வருவதற்கு 
என்னங்குற???
இப்படி வந்து உன்னிடம் பேச அசைத்தான்!!



உன்னால எப்படி புள்ள

கல்லுமனசுகாரியடி நீ
பிஞ்சுமனசுகாரனடி நான்
கொஞ்சம் சொல்லுன்னு 
நான் கேட்க !!!
கெஞ்சி நில்லுனு நீ போக
சுத்தி நிப்பவனெலாம்
என்ன பத்தி ஏளனமா 
நினைப்பானு நீ நினைக்காம
என்ன நின்ன இடத்துலயே விட்டுப்புட்டு!!
சொல்லால கொண்ணுப்புட்டு
அத்தான அம்போனுவிட்டுப்புட்டு
அப்பனோட அப்படியே போனவளே
அத்தனையும் தாங்கிட்டேன்!
நீ வாடான்னு சொல்லிருந்தா
நிக்காம வீதி தேடி வந்துருப்பேன்
நீ போடானு சொல்லிப்புட்ட
விதியேனு நிக்குறேனிப்ப!!!


Tuesday, March 9, 2021

அட போங்க டா

வித்தியாசமே இல்லாமல் 
ஒருவரைப் போல் ஒருவர் 
வாழ்வதில் என்ன சுவாரசியம் 
இருக்கப்போகிறது என்று 
நான் கேட்டால் என்னையே
வித்தியாசமான பிறவியா 
நீ என்று வினவிகிறது 
இந்த ஆட்டுமந்தையுலகம்!!!!


Monday, March 8, 2021

ஆசை ஆசை

என்னோடு நீ வா
எப்போதும் இப்போதும் 
அது போதும் எனக்கு
ஆமாம் நீ மட்டும் போதும் எனக்கு!!!
இப்படி ஒருவர் கூறி கேட்க 
ஆசைத் தான் !!!!!!!

போதும் போ!!

நிரந்தரமில்லாத உன்னைவிட
நிரந்தரமான உன் நினைவுகள் மட்டும் 
போதும் 

இஷ்ட்டபட்டவர்களின் இஷ்ட்டமே

இஷ்ட்டபட்டவர்களை அவர்களின்
இஷ்ட்டப்படியே விட்டுவிடுங்கள்
இல்லையெனில் என்றாவது 
ஒரு நாள் இருவரின் இஷ்ட்டத்தையும்
இழந்து கஷ்ட்டத்தில் வாழ நேரிடும்!!

இனி எல்லாம் நலமே

இனி எல்லாம் சரியாகிடும் 
என்ற‌ நம்பிக்கை ஒன்றை மனதில் வைத்து கொண்டால் வாழும் வாழ்க்கையும் அழகாகுமாம்!!!!

நீ சூட்டிய பெயர்!!

பிடித்தவர்கள் ஆயிரம் பெயர் சூட்டினாலும் நீ சூட்டிய மயில் 
என்ற பெயர் கேட்டால் மட்டும்
என்னை அறியாமல் கண்ணீர் வருகிறதே ஏன்!!.…

இதுதான் அதுவோ??

மன்னிக்க முடியாத தவறுகளை‌ 
மனதிற்கு பிடித்தவர்கள் தெரிந்தே 
செய்தாலும் மனித்துவிடுகிறோமே ஏன்?? இதுதான் காதலோ????

நீ சென்றால் என்ன 😏

என் அன்பை வேண்டாம் என்று 
நீ சென்றால் எனக்கு என்ன 😏
நீ வேண்டாம் என்ற அன்பைக் கொண்டாட எனக்கு ஒரு 
அன்பு கிடைக்காதா என்ன???

Thursday, February 25, 2021

❤️❤️

உனக்கு நேரம் இருந்தால் 
ஒருமுறை ,ஒருமுறை மட்டும்
நாம் பலமுறை சிரித்ததையும்
ஒரு சிலமுறை முறைத்துக் கொண்டதையும்!!!
விடுமுறையில் கூட பிரியாமல்
பிரியாமாக இருந்ததையும்
பிரிந்து போன நம் காதலையும்
மறக்கமால் நினைவுப்படுத்தி பார்
கட்டாயம் வந்து வந்தே செல்வேன்
என்று என்னிடம் ஏளனமாக கூறுகிறது !!!
என் பள்ளி வகுப்பறை!!!!!

Wednesday, February 10, 2021

ம்ம்

உண்மையைச் சொன்னால் 
நாம் அனைவருமே ஒரு வகை 
இதயமுடைய இயந்திர உயிரினமே!!
காதல் என்ற ஒன்று 
வாழ்க்கையில் வந்த பின்பு!!
எதனால் என்று தெரியுமா???
உணவு முதல் உறக்கம் வரை
எதுவுமே ம்ம் என்ற உத்தரவு 
வந்த பின்பே செயல்படுவதால்!!!!


Tuesday, February 9, 2021

உன்னோடு!!

உன்னோடு சண்டையிட்டு பின்பு 
உன்னோடே சமரசமும் ஆக வருகிறேன்!!!
ஆனால் என்ன செய்வது ???
உன்னிடம் வரும் என்னை 🥺
நீ உதறித் தான் செல்கிறாய்!!

Monday, February 8, 2021

உள்ளே நீ

உனக்கென்ன உள்ளத்தில் 
உருவாக்கியிடமெல்லாம்
நீ உடைத்து சென்ற பின்பும்
உன்னையே உச்சரிக்கிறது !!

ஓய்வு

ஓய்வும் ஒரு நாள் சலிக்கதான் செய்கிறது !!!!!
ஒரு வேலையும் செய்யாமல் 
உணவு உண்ணும் போது!!

அருகாமையில்!!

அருகில் இருப்பதைவிட 
அருகாமையில் இருந்திருக்காலம் என்ற தருனம் அனைவரின் வாழ்விலும் வந்து தான் செல்கிறது!!!

Sunday, January 17, 2021

அன்பே வா

இதழோர சிரிப்பின் ஈரம் காயும் முன்பே 
அன்பே வா !!
என் வாழ்வின் இறுதிகனம் இது !!
என்றான் குறுதி சொட்டும் இராணுவன் 
எல்லையில் இருந்து தன் மனைவியின் கண்களை  பார்த்து
 அவளிடம் ஒவ்வொரு முறை நான் இங்கு வரும்போது எல்லாம்
 நீ எனக்காக காத்திருப்பாய் 
ஒரு பயத்துடனே என்னை வழி அனுப்பி வைத்தாய்
பெண்ணே!!
 இனி அந்த பயம் உனக்கு வேண்டாம் என்று கூற அழைத்தான்!!
காரணம் அவன் எப்படி இருக்கிறான் என்று கவலைபடுவதற்கு பதில் 
அவன் இல்லை என்று கலங்காமல் அவள் இனியாவது நிம்மதியாக உறங்க வேண்டும் என்று கூறியபடியே கண்களை மூடிணான்!!

Tuesday, January 12, 2021

அவளோடு!!!

அவளோடு போகும் போது மட்டும் 
என்னவோ தெரியவில்லை 
தெருவில் நடந்தாலும்
உலா வருவதுபோலவே 
உணர்கிறேன்!!!

இதயம் இருந்தால் சொல்லி அனுப்பு!!

இதயம் இருந்தால் 
சொல்லி அனுப்பு
இமயத்தில் நீ இருந்தாலும்
இன்றே ஓடிவருகிறேன்
இறந்த போன நம் காதலை 
உயிர்பெறச் செய்ய
என்றான் அவன் இதயத்தில் 
இருந்த காதலியிடம் மட்டும்!!

Sunday, January 10, 2021

நீ

நீருக்குள் இருக்கும்வரை தான் 
மீனுக்கு உயிர் இருக்கும்!!
அதுபோல தான் நானும்
நீ இருக்கும்வரை தான் 
எனக்கு உயிர் இருக்கும் !!

Saturday, January 9, 2021

கண்மணி

காணாமல் போக ஆசைத் தான்
கண்மணியின் கண்ணுக்குள் மட்டும்

பெண்ணியம்

பெண்ணியம் பேசும் பெரியார்களே!!
பெண்ணியம் இதுதான் என்று உணர்த்திவிடுங்கள்??
நீங்கள் இதுவரை பேனிக்காத்த பெண்ணியத்தின் உண்மைகளை??
உரைநடையில் பேசும் 
பெண்ணியத்தை எப்போது நடைமுறையில் பயன்படுத்த முன்வருவீர்கள்??
காலங்கள் வேண்டுமா???
கலங்கிய பெண்ணின் கண்ணீரைத் துடைக்க??
பெண்ணை வீட்டுக்குள் வைத்து
பிறபாலினத்தோடு பழகாமல் பூட்டொன்று 
போட்டு வைப்பதா பெண்ணியம் ??படிப்பு  அளித்தும் அவளை 
பாதியில் திருமணம் 
செய்து வைப்பாதா பெண்ணியம்???
என் சாதி தான் பெரிது ,சிறிது  என்று உயிரில்லா சாதிக்கு கொடுக்கும் 
மதிப்புக் கூட பெண் சாதிக்கு கொடுப்பதில்லையே ஏன்??
இது தான் உங்கள் பெண்ணியமா???
என்று ஒவ்வொரு பெண்ணும் சரிசமம் என்று எண்ணி 
அவளை அவளாக 
 வாழ வழி தந்து 
இரவில்  தனியாக 
நடமாட வாய்ப்பு வருகிறதோ அதுவே
உண்மையில் பெண்ணியம்!!
பெண்ணியம் பேசும் பெரியார்களே 
இதை நீங்கள் செய்தால் அதுவே 
உங்களுக்கு கிடைத்த சிறந்த  பொக்கிஷம்.

Thursday, January 7, 2021

நான் இன்றி நீ இல்லை!!

நீரின்றி நிலமில்லை 
அதேபோல் 
நான் இன்றி நீ இல்லை 
என்று என்னுடனே 
இருக்கும் தன்னம்பிக்கையே 
என்றாவது ஒரு நாள் 
உனக்காகவே நான் இந்த 
மன்னையும் வின்னையும் 
வென்றிடுவேன்!!!!

Tuesday, January 5, 2021

தகப்பனின் தங்கமே!

தன் தந்தையிடம் 
இராஜகுமாரியாக 
இருக்கும் எல்லா 
பெண்களுக்கும் 
ஒரு கணவு இருக்கும் 
அது இராஜகுமாரனை 
மனப்பது அல்ல!!
தன் தந்தையை தன்
செயல்களால் பெருமைபடுத்தி
இராஜாவாக இராஜநடைபோடவைப்பதே!!!

Monday, January 4, 2021

காதல்

உணர்வோடு கலந்த உயிரே
உன்னை விட்டு நான் 
எங்கு போவது போல் 
இருந்தது !!!
அந்த சாலை ஓரத்தில் நீ 
என்னை விட்டு உன் வீட்டுக்கு 
சென்றபோது!!!