Friday, April 30, 2021

தம்பியே!!

வரமாய் வந்த வைரமே!!
என்னை தாங்கிப் பிடிக்கும் தங்கமே!!
தம்பி நீ இருக்கையில் 
வேறென்ன வேண்டும் எனக்கு??
வளரும்போதே என்னையும் உடன் வளர்த்த உடன்பிறப்பே!!
உயிர் இருக்கும் வரை 
உன்னை நம்பியே வாழ்வேன் என் தம்பியே!!

உனக்காக

இன்று இருப்போர்
நாளை இல்லை
ஆனால் இருக்கும்வரை
உனக்காக ,உனத்தாக,
உன் உரியவராக இருக்கவே
பேராசைக்கொள்கிறேன் நான்!!

மதிப்பு

உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ
உன்னை மதித்தாலும் மதிக்காவிட்டாலும்
நீ மத்தித்துவிடு மரியாதைக்கொடுத்துவிடு!!

Monday, April 26, 2021

நீயா நானா

அழைப்பும் குறுஞ்செய்தியும்
சண்டையிடுகிறது !!
நீயா நானா என்று ??
வராத என் அழைப்பேசிக்குள்!!

Sunday, April 25, 2021

நீ

நெஞ்சில் நீ
நினைவில் நீ
எனக்குள் நீ -என்றே நான்!!




எனக்கே

காதலியோ கட்டிய மனைவியோ!!
யாராக இருந்தாலும் எண்ணங்கள்
ஒன்று தான்-தனக்கானது தனக்கு மட்டுமே -என்பதே!!!

மனமே மனமே

மனமே மனமே!!!
மண்டியிட ஆசை 
உன்னிடம் மட்டும்!!!
மறக்காமல் என்னுடன் 
நீ மட்டும் இருப்பதால்!!

பேனா

வர்ணிக்க நீ வா!!
வாசிக்க நான் வருகிறேன்!!
வார்த்தைகள் வாடியது!!
சொற்கள் சோர்ந்தது 
என்றது என் பேனா!!!!






Thursday, April 8, 2021

வரிகளே வரிகளே

வரிகளே வரிகளே
என்னை மன்னித்து விடுங்கள்!!
உங்களை கவனிக்காமல் விட்டது 
என் தவறு தான்!!!
உள்ளமும் சரி உள்ளங்கையும் சரி
நீங்கள் வரமாடீர்களா என்றே
இருக்கிறது?????
உன் வீட்டுப் பிள்ளை தானே நான்!!
என்னை மன்னித்து விடுங்கள்
நாம் வழக்கம்போல் வாசகர்களுக்கு
கவிகள் வாசிக்க வழங்குவோம்!!