Sunday, September 25, 2022

சந்தேகம்

நான் செய்யும் 
சந்திகளை  
எல்லாம் 
திருத்த 
தேகத்துள் 
வந்தவள், அவள் !!
அதனால் தான் 
என்னை சந்தேகிக்கின்றாள்!!!

இல்லை

அன்று போல் இன்று இல்லை
என்ற வார்த்தையை பயன்படுத்தவே கூடாதென்று இருந்தேன்
ஆனால் அன்று போல் இனி என்றும் இல்லை என்று பயன்படுத்த வைத்து விட்டாய்!!

ஆசை நீ!!

அவள் ஆசை நீ
 என்பதை 
எப்படி மறந்தாய்!!


விலக முடியாமல்

விட்டுச் செல்லவும் முடியாமல்
விலகி நிக்கவும்‌ முடியாமல்
கண்களில் கண்ணீரோடு
தத்தளித்தே செல்கிறது 
இங்கு பலரின் காதல்!!