Monday, September 30, 2019

பணிவு

எங்கு சென்றாலும் பணிவோடு நடக்க கற்றுக்கொள் ஏனெனில்
பணிவே பல இடங்களில் பாராட்டை தேடித்தரும்....

Sunday, September 29, 2019

நண்பா!! நண்பா!!

நண்பா!! நண்பா!!
துவண்டு போகாதே
தோல்வி அடைந்தாய் என்று
நண்பா!!  நண்பா!!
திகைத்து போகாதே...
வெற்றி பெற்றாய் என்று
நண்பா!!  நண்பா!!
தொலைத்து விடாதே....
உன் திறமையை கேலி
செய்பவர்கள் முன்பு..
உன்னை அனைவரும் புரிந்து கொள்வார்கள்...
உன்னை அறிந்த பின்பு...
நண்பா வா
செல்வோம் சரித்திரம் படைக்க.....

Friday, September 27, 2019

அவள்❣️

உன் ஒற்றை பார்வையில்
என்னை கொள்ளையடித்து விட்டாயடி...
உன் செய்கையால்.....
என் நேரங்கள் அனைத்தையும்
உனக்கானத்தாய் மாற்றி விட்டாயடி .....
உன் மூச்சினால்..
என்னுள் காற்றாக சென்று..
என்னவள் ஆனாயடி...
உன் சிரிப்பினால்..
என்னை சிறை பிடித்து விட்டாயடி
என்னை எப்போது விடுவிப்பாய்..
என் என்னவளின் விடையோ வியப்பில் தள்ளியது என்னை‌..
என் கண்களால் தானே
உன் கொள்ளையடித்தேன்
என் கண்கள் மூடி நான் கல்லறையில்
உறங்கும் போது விடுவிக்கிறேன் என்றால்....

Thursday, September 26, 2019

நான் நானாக 😍

உன்னிடமே சில கேள்விகள் கேட்டுகொள், ஏன்எனில்.
உன்னிடமே இருக்கிறது பல
பதில்கள்...
அவையெல்லாம் சேமிக்காமல்
செம்மைபடுத்துங்கள்....
நீங்கள் யார் என்று கண்டறியுங்கள்
பிறகு அனைவரிடமும் கூறுங்கள்
நான் நானாக இருக்கிறேன்
ரியாக இல்லாமல் என்று...

Tuesday, September 24, 2019

சிரி

சிரித்து கொண்டே இரு
சிலருக்கு புரியட்டும்
உன் மீது உனக்கு இருக்கும்
நம்பிக்கை....

Monday, September 23, 2019

துணிந்து எழுங்கள்

விடிந்ததும் வருவதோ  சூரியன்
விடிவதற்குள் இருப்பதோ சந்திரன்
இரண்டும் ஒரே இடத்தில் இருக்காது
ஆனால் இரண்டிலும் பயன் உண்டு..
இரவில்  வெளிச்சம் தருவது சந்திரன்
பகலில் வெளிச்சம் தருவது சூரியன்
அதுபோல தான் நம் வாழ்வில்
வெற்றியும் தோல்வியும்....
வெற்றி பெற்றால் வேகம் ...
தோல்வி அடைந்தால் விவேகம்...
அதனால் எதையும் கண்டு துவண்டுபோகாதீர்கள்....
துணிந்து எழுங்கள்...
வாழ்ந்து காட்டலாம்.....

Saturday, September 21, 2019

நாடி! ஓடி! வாடாதே!

எப்போதும் யாரையும் நாடி
அவர்களுக்கு ஏற்றபடி ஓடி
அவர்களுக்கு என வாழாதிர்கள்
எதையும் தானாக செய்யும் ஆற்றலை
வளர்த்து கொள்ளுங்கள்.....
பிறர் மீது வைக்கப்படும் நம்பிக்கையை
உங்கள் மீது வைத்து பழகுங்கள்
பிறரை நேசிக்கும் நீங்கள்
முதலில் உங்களை நேசியுங்கள்
எதற்காகவும் ஒருவரை தேடி செல்லாதிர்கள்.‌.....
தேவை என்றால் தேடி வருவார்கள்...
நீங்களாக சென்று, பிறகு
வாடி நிக்காதிர்கள்...

Friday, September 20, 2019

தேவை

அதிகம் பேசாதே
அடக்கம் தேவை,
விவாதம் செய்யாதே
  விவேகம் தேவை,
தயக்கம் காட்டாதே
  தைரியம் தேவை,
எதையும் எண்ணாதே
   எளிமை தேவை,
அலட்சியம் கொள்ளாதே
    ஆற்றல் தேவை,
முயற்சியை விடாதே
     பயிற்சி தேவை,
இவை எதையும் மறந்துவிடாதே
 ஏன்எனில் வாழ இவையே தேவை....!!!!!!!!!

Thursday, September 19, 2019

இப்படிக்கு அனுபவம்

எப்போதும் துணையாக இரு,
ஒருபோதும் துரோகியாக இருக்காதே,
எப்போதும் நண்பனாக இரு,
ஒருபோதும் நயவஞ்சகனாக மாறிவிடாதே,
எப்போதும் அன்பாக இரு ,
ஒருபோதும் அடிமையாக இருக்காதே,
எப்போதும் விழிப்புடன் இரு,
ஒருபோதும் சலுப்போடு இருக்காதே,
எப்போதும் கேள்விக்கு பதிலாக இரு,
ஒருபோதும்  குழப்பத்தின் பதிலாக, இருக்காதே,
எப்போதும் தேடலில் இரு,
ஒருபோதும் தொலத்ததை தேடாதே,
இப்படி அறிவுரை ஆற்றியது
அனுபவம்!!

Wednesday, September 18, 2019

அழைக்காமல் வருகிறேன்!!

காலை முதல் மாலை வரை ...
கால்கள் இரண்டும் ஓடும் வரை...
கைகள் இரண்டும் மடங்கும் வரை...
பற்கள் எல்லாம் கொட்டும் வரை...
பார்க்கும் கண்கள் மங்கும் வரை...
தலையில் நரை பரவும் வரை....
உயிர் உடலை விட்டு விலகும் வரை....
வா என்று நீ அழைக்காமல்......
வந்துவிடுவேன் என்று ஏளனமாக
உரைக்கிறது துன்பம்!!!!