Tuesday, March 30, 2021

என் என்னவளே

என் இதய மெழுகு பொம்மையே!!
நான் தூரமாக செல்வதற்கு முன்
என் தாராமாக நீ வருவாயா??
உயிர்விடும் முன் ஒருமுறையாவது 
உன்னவனாக இருந்து போக ஆசை
என்றான்  மீசை வைத்த இராணுவன் ஒருவன்!!!

Friday, March 26, 2021

தாரமே தாரமே

தாய் வேண்டாம்
தந்தை வேண்டாம்
தமயன் வேண்டாம்
தங்கை வேண்டாம்
நீ கட்டிய தாலிப் போதும்
என்று வரும் தாரத்திடம் 
தாழ்ந்துப்போக வேண்டாம் 
தாழ்த்தி பேசாமலே இரு
அதுவே போதும் !!!

எண்ணுவாயா??

என்னை எண்ணாமல் சென்ற
என் என்னவளே!!!
என்றாவது என்னை எண்ணுவாயென்றே 
என்றும் உன்னை எண்ணியே
காத்திருக்கிறேன்??

Sunday, March 21, 2021

என் கவியுக கவிஞனே

என் கவியுக கவிஞனே!!!
மண்ணைவிட்டு விண்ணையால
நீ சென்றுவிட்டாய்??
ஆனால் உன் வரிகளோ என்னை ஆள்கிறது!!!
நீ எழுதிய ஒவ்வொரு பாடலும்
உன்னையே பாடுகிறது!!
கவிஞனே !! எப்போது நீ வருவாய் 
வந்து உன் ஆனந்தயாழை மீண்டும் தீட்டமாட்டாயா என்றே இருக்கிறது
என் நெஞ்சம் ???
எளிமை கவிஞனே !!
எழுந்து வா !!!
மீண்டும் எழுத வா!!
என் கவியுக நாயகனே !!!!
முத்து முத்தாக கவியெழுதிய 
நா.முத்துகுமாரே வா !!!
இனைந்து கவி எழுத 
ஆசைப்படுகிறேன் வா!!!

Saturday, March 20, 2021

இடம் வேண்டும்

உன் இனையத்தில் இடம் வேண்டாம் 
உன் இதயத்தில் இடம் வேண்டும் காரணம் கருவியில் உன்னோடு இல்லாமல் தாயின் கருவில் இருந்ததைப்போல் உணருவேன்!!!அதற்கே😝

தமிழ்

கவிகளே என் உலகமாகிப்போனதே!!!வரிகளே என் வழித்துனையாகி நிற்கிறதே-காரணம் நான் தமிழ் மீது கொண்ட பற்றோ??அல்ல தமிழ் மீது கொண்ட பக்தி!!❤️.......✍️

யார் சிறந்த கவிஞன்

காகிதத்தில் மையால் எழுதுபவன் எல்லாம் கவிஞன் அல்ல
பொய்களைத் தவிர்த்து மெய்கள்
கோர்த்து வரிகளால் வருணிக்க செய்பவனே ஒரு நல்ல கவிஞன்!!

Thursday, March 18, 2021

என்னவன்

உன்னைப் பற்றி கவி 
கேட்டாய் என்னிடம்!!
வரிகளோ வரவில்லை
காரணம் தயக்கமா ??
அல்ல- உன்மீது நான் 
கொண்ட மயக்கம்!!!
அதனால் என் என்னவனே!!
என்னைப்பற்றி சொலென்று 
கேட்பதவிட்டுவிடு -ஏன்னெனில்
எண்ணிலடங்காத‌ உந்தன் அழகையும் அறிவையும்
என்னால் எப்படி எட்டு வரிகளில்
எழுதி சொல்வது உனக்கு???


Wednesday, March 10, 2021

🤭🤭

வானத்து பொண்நிலவே
 என்  பக்கத்துவீட்டுப் பெண்நிலவே!!
வாடுகிற பூக்கூட வாடமல் இருக்கிறதே  நீ வாரிவைத்தால்
மட்டும் !!
வண்ணத்துப்பூச்சியெல்லாம் வரம் 
வாங்கி நிக்குதடி உன் கரம் மேல் அமற!!!!!!
விழியோரத்தில் நீ வைத்த 
மையுக்குள் விழுந்தேனடி 
என்னோடு நீ வருவதற்கு 
என்னங்குற???
இப்படி வந்து உன்னிடம் பேச அசைத்தான்!!



உன்னால எப்படி புள்ள

கல்லுமனசுகாரியடி நீ
பிஞ்சுமனசுகாரனடி நான்
கொஞ்சம் சொல்லுன்னு 
நான் கேட்க !!!
கெஞ்சி நில்லுனு நீ போக
சுத்தி நிப்பவனெலாம்
என்ன பத்தி ஏளனமா 
நினைப்பானு நீ நினைக்காம
என்ன நின்ன இடத்துலயே விட்டுப்புட்டு!!
சொல்லால கொண்ணுப்புட்டு
அத்தான அம்போனுவிட்டுப்புட்டு
அப்பனோட அப்படியே போனவளே
அத்தனையும் தாங்கிட்டேன்!
நீ வாடான்னு சொல்லிருந்தா
நிக்காம வீதி தேடி வந்துருப்பேன்
நீ போடானு சொல்லிப்புட்ட
விதியேனு நிக்குறேனிப்ப!!!


Tuesday, March 9, 2021

அட போங்க டா

வித்தியாசமே இல்லாமல் 
ஒருவரைப் போல் ஒருவர் 
வாழ்வதில் என்ன சுவாரசியம் 
இருக்கப்போகிறது என்று 
நான் கேட்டால் என்னையே
வித்தியாசமான பிறவியா 
நீ என்று வினவிகிறது 
இந்த ஆட்டுமந்தையுலகம்!!!!


Monday, March 8, 2021

ஆசை ஆசை

என்னோடு நீ வா
எப்போதும் இப்போதும் 
அது போதும் எனக்கு
ஆமாம் நீ மட்டும் போதும் எனக்கு!!!
இப்படி ஒருவர் கூறி கேட்க 
ஆசைத் தான் !!!!!!!

போதும் போ!!

நிரந்தரமில்லாத உன்னைவிட
நிரந்தரமான உன் நினைவுகள் மட்டும் 
போதும் 

இஷ்ட்டபட்டவர்களின் இஷ்ட்டமே

இஷ்ட்டபட்டவர்களை அவர்களின்
இஷ்ட்டப்படியே விட்டுவிடுங்கள்
இல்லையெனில் என்றாவது 
ஒரு நாள் இருவரின் இஷ்ட்டத்தையும்
இழந்து கஷ்ட்டத்தில் வாழ நேரிடும்!!

இனி எல்லாம் நலமே

இனி எல்லாம் சரியாகிடும் 
என்ற‌ நம்பிக்கை ஒன்றை மனதில் வைத்து கொண்டால் வாழும் வாழ்க்கையும் அழகாகுமாம்!!!!

நீ சூட்டிய பெயர்!!

பிடித்தவர்கள் ஆயிரம் பெயர் சூட்டினாலும் நீ சூட்டிய மயில் 
என்ற பெயர் கேட்டால் மட்டும்
என்னை அறியாமல் கண்ணீர் வருகிறதே ஏன்!!.…

இதுதான் அதுவோ??

மன்னிக்க முடியாத தவறுகளை‌ 
மனதிற்கு பிடித்தவர்கள் தெரிந்தே 
செய்தாலும் மனித்துவிடுகிறோமே ஏன்?? இதுதான் காதலோ????

நீ சென்றால் என்ன 😏

என் அன்பை வேண்டாம் என்று 
நீ சென்றால் எனக்கு என்ன 😏
நீ வேண்டாம் என்ற அன்பைக் கொண்டாட எனக்கு ஒரு 
அன்பு கிடைக்காதா என்ன???