Wednesday, July 15, 2020

🤔அ முதல் ஔ வரை 🤔

அ ஆ இ‌ ஈ உ‌ஊ எ ஏ ஐ ஒ ஓஔ 😍
நிறைந்து தான் வாழ்க்கை 🤩
புரியவில்லையா ??🤔
சொல்கிறேன் கேளுங்கள்🙋
அன்புடனும் ஆதரவுடனும்
இணைந்து ஈகையை மனதார 
உள்ளத்தில் இருந்து வழங்கி
ஊஞ்சலை போல் முன் பின் 
இருக்கும் வாழ்க்கையில் நினைத்ததை  செய்து முடிக்க வேண்டும் என்று எளிமையான முறையில் ஏளனமான பேச்சுகளை 
ஐயமின்றி கடந்து வாருங்கள்
ஏனெனில் ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஓவியமே!!
அதில் ஔவியம் இன்றி வாழ்வோமா?
இவ்வளவு தான் வாழ்க்கை 
புரிந்து செயல்படுங்கள்..


Tuesday, July 14, 2020

பிடித்ததை செய்

எதுவும் இல்லை என்றாலும் கவலைக் கொள்ளாதே!!
ஏனெனில் இங்கு 
பலபேர் பணம் தான் 
பெரியது என்கிறார்கள்
ஆனால் அவர்களுக்கு தெரியாது
பிடித்த வேலையை செய்யும்போது
கிடைக்கும் ஆனந்தம்
பிறக்கும் முன் தாய் கருவறையில்
இருந்ததைப் போலவே இருக்கும் என்று!
அதை உணர்ந்தால் என்னவோ
கையில் பேனாவை வைத்து
கவி எழுதிகிறேனோ?
 இன்று.....!!




Monday, July 13, 2020

தனிமை என்ன செய்யும்

எதுவும் இல்லாமல்      
இருந்தது பாருங்கள் 
தனிமை புரியும் என்று 
சிலர் விரக்தியில் கூறினார்கள்
ஆனால் தனிமை அது அல்ல
அனைத்தும் இருந்தும் 
இல்லாதது போல் இருப்பது தான்
உண்மையில் தனிமை என்று 
நான் உணர்கிறேன்
மனதிற்குப் பிடித்தவர்கள் 
பிரிந்து செல்வதா தனிமை?
கிடையாது !!!
உடன் இருந்த உள்ளத்தை 
உணராமல் இருக்கும் போது 
ஏற்படும் வெளிக்காட்ட முடியாத
உள் உணர்வே தனிமை !!
அதனால் தனியாக இருப்பது தனிமை இல்லை
தனித்துவிடுவதும் தனிமை இல்லை
இதை புரிந்து கொள்ளுங்கள் 
அதுவே போதும்...
தனிமை ஒன்றும் தவறில்லை
தனிமை தான் ஒருவனுக்கு
சிறந்த ஆசான்
அவனை அவனாக மட்டும் 
உணர வைத்து
மாறுதலை உண்டாக்கும்


Sunday, July 12, 2020

உணர்வுகள்

யாது என்று அறியாமல்
இவர் என்று புரியாமல்
இதுவே இல்லை அதுவே
என்ற குழப்பம் இல்லாமல்
தன்னையே அறியாமல்
வருவது தான் உணர்வுகளோ??
என்ற கேள்வி அனைவருக்கும்
இருந்து கொண்டு தான் இருக்கிறது.
என்ன செய்வது!
மனிதனாக பிறந்தால் 
உணர்வு ஒன்று இருக்க தானே செய்யும் என்ற உணர்வுடன் 
இவ்வரிகளை சமர்ப்பிக்கிறேன்

Saturday, July 11, 2020

சும்மா தான் இருக்கிறேன்

சும்மா தான் இருக்கிறேன்😋
சும்மா தான் இருக்கிறேன்😋
ஆனால் ஓடி கொண்டே இருக்கிறேன்🙋
அம்மா பின்னாடி தீனிக்காக!!🤷