ஆணோ பெண்ணோ
இருவரும் சமம் என்ற
உலகத்தில் வாழ்கிறோம்
ஆனால் பெண் என்றுமே
பூட்டியே வைக்கப்படுகிறாள் !!
காரணம் அவளிடம் மட்டுமே
கற்ப்பிருக்கிறது என்ற
மூடநம்பிகையால் !!!
ஆண்களுக்கும் கற்பென்ற ஒன்று
உள்ளது !!!
முகம்த்தெரியா பெண்ணை எவன்
தன் தாயாகவும் தங்கையாகவும்
பார்த்து அவர்களை பாதுக்காகிறானோ
அவன் கற்புடையவன்!!!
காதலியாக இருந்தாலும்
கற்பை பறிக்காமல்
கற்பை பறிப்போகாமல்
காக்கிறானோ அவன் கற்புடையவன்
காலம் மாறலாம் , கலாச்சாரம் மாறலாம் ஆனால் இன்னமும்
பெண்கள் மற்றும் அவர்களின்
பெற்றோர் பயந்தே வாழ்கின்றனர்
காரணம் ஆணுக்கும் கற்ப்பு என்ற
ஒன்று இருக்கிறது என்பதை மறந்து !!
பெண் பூப்போல மென்மையானவள் என்பதை மறந்து
அவளை பூவின் நாறைப் போல்
கருதி அவளை வருத்தி
வாழ்க்கையவே அளித்துவிடுகிறார்கள்
இந்த கற்பற்ற காட்டுமிராண்டிகள்!!
உடலாலும் வருந்தி உயிர்ப்போகும்
துயரையும் பெற்று இறுதியில்
உயிரையும் விடுகிறாள்
இந்த அப்பாவி பெண் !!!
சட்டங்கள் பல இருந்தாலும்
கர்ப்பிளந்தவள் என்ற பட்டம்
மட்டும் பெண்ணிருக்கு தருகிறது
இந்த இரக்கமற்ற உலகம்!!!
இந்த இழிவு நிலை எப்போது
மாறுமோ-இப்படிக்கு
மனத்தில் தயிரியமிருந்தும்
தயங்கும் பெண் ..
காரணம் எனக்குப்பிடித்ததை செய்தால் தட்டிவிடும் உலகம்
என்பதால்!!