Monday, November 25, 2019
கடினம்
Tuesday, November 19, 2019
கண்ணாமூச்சி ரே ரே
Saturday, November 16, 2019
விதை
Monday, November 4, 2019
காட்சி
திரைபடங்களை போன்றதே
நம் வாழ்வு...
தினந்தோறும் காட்சிகள்
ஏராளம்....
அதில் வில்லனை போல்
பழிவாங்கும் எண்ணம் இல்லாமல்
காமேடியனை போல் அனைத்தையும்
நகைச்சுவையாக எண்ணி வாழவேண்டும்.....
அப்போது தான் வாழ்க்கை
Tuesday, October 15, 2019
அறிந்திடு
வித்தியாசங்களின் விதையாக
நீ இரு..........
விடையாக மட்டும் இல்லாமல்
கேள்வியாகவும் இரு...
தெரிந்ததை பகிர்ந்திடு......
அறிந்தை அள்ளிக்கொடு
ஏன் எனில்
அழிக்க முடியாத ஒரே விசியம்
கற்றதை கற்று தருதல்....
படித்தை பகிர்ந்து தருதல்...
Monday, October 14, 2019
திருத்தம்
தினமும் பலரை சந்திக்கும் நாம்
சிலரிடம் சிலவற்றை கற்கிறோம்
அந்த கற்றலை சிலருக்கு கற்றும் தருகிறோம்....
ஆனால் அதை எவரும் நம் வாழ்வில்
பயன்படுத்துவதில்லை...
ஆனால் அறிவுரை கூற நம்மைவிட
ஆள் இங்கு இல்லை....
இனியாவது திருத்திக் கொள்வோம்....
Thursday, October 10, 2019
இருக்கும் வரை
விடையில்லா பயணம்
விடைகிடைத்தால் மரணம்
இதுதான் வாழ்க்கை...
அதனால் இருக்கும் வரை
இரக்கத்துன் இருப்போம்
இறந்த பின் ..
பலரின் இதயங்களில் வாழ்வோம்
எண்ணம் போல் வாழ்க்கை..
எண்ணம் போல தான்
Wednesday, October 9, 2019
கொலுசு
அவள் தான் !
அவளேதான்!!
என்று காட்டிக்கொடுக்கும்
கொலுசே;
வாசல் வரை வந்தவள்...
வாழ்க்கை வரை வருவாளா??
கண்களில் காதலை தூவி
பேனாவில் பதிலை கூறி...
என் கைகளை அவள் கையோடு
இனணத்து நடைபோட ஆசை...
அவள் வருவாளா??
அவள் விரும்பவில்லை எனில்,
இனி வரும் பிறவிகள் அனைத்திலும்
உன்னைப் போல் கொலுசாக மாறி,
அவள் விருப்பத்தை மீறி,
அவள் காலில் பற்றிக்கொண்டு
அவளுடன் இராஜ நடைப்போடுவேன்
பார்கிறாயா!!!!!!!
Monday, September 30, 2019
பணிவு
எங்கு சென்றாலும் பணிவோடு நடக்க கற்றுக்கொள் ஏனெனில்
பணிவே பல இடங்களில் பாராட்டை தேடித்தரும்....
Sunday, September 29, 2019
நண்பா!! நண்பா!!
நண்பா!! நண்பா!!
துவண்டு போகாதே
தோல்வி அடைந்தாய் என்று
நண்பா!! நண்பா!!
திகைத்து போகாதே...
வெற்றி பெற்றாய் என்று
நண்பா!! நண்பா!!
தொலைத்து விடாதே....
உன் திறமையை கேலி
செய்பவர்கள் முன்பு..
உன்னை அனைவரும் புரிந்து கொள்வார்கள்...
உன்னை அறிந்த பின்பு...
நண்பா வா
செல்வோம் சரித்திரம் படைக்க.....
Friday, September 27, 2019
அவள்❣️
உன் ஒற்றை பார்வையில்
என்னை கொள்ளையடித்து விட்டாயடி...
உன் செய்கையால்.....
என் நேரங்கள் அனைத்தையும்
உனக்கானத்தாய் மாற்றி விட்டாயடி .....
உன் மூச்சினால்..
என்னுள் காற்றாக சென்று..
என்னவள் ஆனாயடி...
உன் சிரிப்பினால்..
என்னை சிறை பிடித்து விட்டாயடி
என்னை எப்போது விடுவிப்பாய்..
என் என்னவளின் விடையோ வியப்பில் தள்ளியது என்னை..
என் கண்களால் தானே
உன் கொள்ளையடித்தேன்
என் கண்கள் மூடி நான் கல்லறையில்
உறங்கும் போது விடுவிக்கிறேன் என்றால்....
Thursday, September 26, 2019
நான் நானாக 😍
உன்னிடமே சில கேள்விகள் கேட்டுகொள், ஏன்எனில்.
உன்னிடமே இருக்கிறது பல
பதில்கள்...
அவையெல்லாம் சேமிக்காமல்
செம்மைபடுத்துங்கள்....
நீங்கள் யார் என்று கண்டறியுங்கள்
பிறகு அனைவரிடமும் கூறுங்கள்
நான் நானாக இருக்கிறேன்
நரியாக இல்லாமல் என்று...
Tuesday, September 24, 2019
Monday, September 23, 2019
துணிந்து எழுங்கள்
விடிந்ததும் வருவதோ சூரியன்
விடிவதற்குள் இருப்பதோ சந்திரன்
இரண்டும் ஒரே இடத்தில் இருக்காது
ஆனால் இரண்டிலும் பயன் உண்டு..
இரவில் வெளிச்சம் தருவது சந்திரன்
பகலில் வெளிச்சம் தருவது சூரியன்
அதுபோல தான் நம் வாழ்வில்
வெற்றியும் தோல்வியும்....
வெற்றி பெற்றால் வேகம் ...
தோல்வி அடைந்தால் விவேகம்...
அதனால் எதையும் கண்டு துவண்டுபோகாதீர்கள்....
துணிந்து எழுங்கள்...
வாழ்ந்து காட்டலாம்.....
Saturday, September 21, 2019
நாடி! ஓடி! வாடாதே!
எப்போதும் யாரையும் நாடி
அவர்களுக்கு ஏற்றபடி ஓடி
அவர்களுக்கு என வாழாதிர்கள்
எதையும் தானாக செய்யும் ஆற்றலை
வளர்த்து கொள்ளுங்கள்.....
பிறர் மீது வைக்கப்படும் நம்பிக்கையை
உங்கள் மீது வைத்து பழகுங்கள்
பிறரை நேசிக்கும் நீங்கள்
முதலில் உங்களை நேசியுங்கள்
எதற்காகவும் ஒருவரை தேடி செல்லாதிர்கள்......
தேவை என்றால் தேடி வருவார்கள்...
நீங்களாக சென்று, பிறகு
வாடி நிக்காதிர்கள்...
Friday, September 20, 2019
தேவை
அதிகம் பேசாதே
அடக்கம் தேவை,
விவாதம் செய்யாதே
விவேகம் தேவை,
தயக்கம் காட்டாதே
தைரியம் தேவை,
எதையும் எண்ணாதே
எளிமை தேவை,
அலட்சியம் கொள்ளாதே
ஆற்றல் தேவை,
முயற்சியை விடாதே
பயிற்சி தேவை,
இவை எதையும் மறந்துவிடாதே
ஏன்எனில் வாழ இவையே தேவை....!!!!!!!!!
Thursday, September 19, 2019
இப்படிக்கு அனுபவம்
எப்போதும் துணையாக இரு,
ஒருபோதும் துரோகியாக இருக்காதே,
எப்போதும் நண்பனாக இரு,
ஒருபோதும் நயவஞ்சகனாக மாறிவிடாதே,
எப்போதும் அன்பாக இரு ,
ஒருபோதும் அடிமையாக இருக்காதே,
எப்போதும் விழிப்புடன் இரு,
ஒருபோதும் சலுப்போடு இருக்காதே,
எப்போதும் கேள்விக்கு பதிலாக இரு,
ஒருபோதும் குழப்பத்தின் பதிலாக, இருக்காதே,
எப்போதும் தேடலில் இரு,
ஒருபோதும் தொலத்ததை தேடாதே,
இப்படி அறிவுரை ஆற்றியது
அனுபவம்!!
Wednesday, September 18, 2019
அழைக்காமல் வருகிறேன்!!
காலை முதல் மாலை வரை ...
கால்கள் இரண்டும் ஓடும் வரை...
கைகள் இரண்டும் மடங்கும் வரை...
பற்கள் எல்லாம் கொட்டும் வரை...
பார்க்கும் கண்கள் மங்கும் வரை...
தலையில் நரை பரவும் வரை....
உயிர் உடலை விட்டு விலகும் வரை....
வா என்று நீ அழைக்காமல்......
வந்துவிடுவேன் என்று ஏளனமாக
உரைக்கிறது துன்பம்!!!!
Friday, August 30, 2019
தாகம்
எனக்கு தாகம் தண்ணீருக்கு மட்டும் அல்ல..
தமிழுக்கும் தான்.....
தாயிடம் தாய்பால் குடித்தபோதே
தமிழ்பாலும் குடித்துவிட்டேன்.....
அவளை அம்மா என்று அழைத்தபோது....
அன்று எப்படி தண்ணீருக்கு பஞ்சம் இல்லையோ அதேப்போல்
தமிழுக்கும் பஞ்சம் இல்லை...
ஆனால் இன்றோ...
தரையில் தண்ணீரும் இல்லை
என் தமிழும் இல்லை...
இரண்டிலும் பஞ்சம் சூழ்ந்துவிட்டது...
காசு கொடுத்து தண்ணீரையும் வாங்கிவிட்டேன்....
காற்றில் என் தமிழயும் பறக்கவிட்டு.....
காசு கொடுத்து தமிழில்லா கல்வியையும் பயல்கிறேன்
ஆங்கிலேயர் நம் நாட்டைவிட்டு வெளியேறி பல ஆண்டுகள் ஆனாலும்
அவர்கள் மொழிக்கு அடிமைப்பட்டு....
அதுவே பெரிது என்று கருதி ....
என் தமிழை இழுந்து வருகிறேன் என்பது உறுதி.....
தாய் போன்று மொழியை போற்ற வேண்டும் என்பதற்காக தான் அதை தாய்மொழி என்கிறோம்...
ஆனால் அதை இழந்து வருகிறோம்.....
என் தமிழ் மொழி மட்டுமே அல்ல
அதுவே எங்கள் ஒலி...
அதுனால் தான் என் தாகமாக தமிழ் மாறிவிட்டது....
Thursday, August 29, 2019
தனிமை தந்த பதில்
தினமும் நாள் தவறமால் என்னை மட்டும் சந்திக்க வருகிறாயே ஏன்?
தினமும் என்னிடம் மட்டும் சகித்துகொள்ளாமல் இருக்கிறாயே ஏன்?
நான் வேண்டாம் என்று எத்தனையோ
நபர்கள் சென்றுவிட்டன.....
ஆனாலும் என்னுடனே வருகிறாயே ஏன்?
நான் வேண்டியவரே வெறுத்து சென்றுவிட்டனர் நீ மட்டும் வருகிறாயே ஏன் ??
இப்படியெல்லாம் என் தனிமையிடம் கேட்டேன்!!!!
அதுவோ இப்படி பதில் அளித்துவிட்டது!!!!
உன்னிடம் உன்னை தேடி நான் வரவில்லை .....
என்னிடம் புறக்கணிக்கப்பட்டு நீ வந்துவிட்டாய்.......
உன்னை வழி அனுப்ப மனமில்லாமல்
உன் வழியே வருகிறேன் நான் இன்று......
Thursday, June 27, 2019
ஊக்குவியுங்கள் உடன் இருப்பவரையும்
கண்ணிமைக்கும் நொடியில் எல்லாம்
காதுகளை அலைபாயாமல்
கஷ்டப்படுபவர்களை மேலும் கஷ்டப்படுத்தாமல் விண்ணை கூட தொட்டு வா என்று ஆறுதல் கூறி முயற்சி என்னும் ஆயுதத்தை ஏந்தி வெற்றி என்னும் பாதையில் ஏறி
உலகையே வெல்ல நான் போகிறேன்
நீயும் வா மெல்ல ....
என்று வாய்ப்புகள் தாருங்கள்