Saturday, January 28, 2023

அம்மா

உன்னை விட
என் மேல் 
பேரன்பு செய்திட
 யாரால் முடியும்
 அம்மா!!!!!

அவனுக்கென!!

அவனுக்கென

அத்தனையும்

விட்டு வருபவளிடம்

அவ்வப்போது

அவளுக்கென

விட்டுக்கொடுத்து

செல்வதில்

தவறேதுமில்லையே???

Saturday, January 21, 2023

கைக்கூடா காதல்

கைக்கூடா 
காதல் கூட‌ 
அழகாக தான் 
இருக்கிறது
களவாட வாய்ப்பு 
இருந்தும் 
கண்களில் மட்டும்
பரித்தவிக்கின்ற பொழுது !!!

Friday, January 20, 2023

எது தவறு !!!

உன்னை 
காண 
கால்கடுக்க
நான்
நிற்பது 
தவறா??
இல்லை 
திரும்பாது 
நீ செல்வது 
தவறா ??


ஒருதலைக் காதல்!!

உன்னோடு எனக்கு
காதலும் வேண்டாம்,
காதலில் வரும் 
மோதலும் வேண்டாம்,
உன்னை கானும்
போதெல்லாம்
எனக்குள் தோன்றும்
 அந்த ஊடல் போதும்
 என்றே வாழ்கிறது 
இங்கு பலரின் 
ஒருதலைக் காதல்!!

Thursday, January 19, 2023

என் இலக்கணமே!!

என் இல்லத்தரசியே
உன்னை பற்றி 
இலக்கணம் 
வேண்டுமா ??
நீயே என்  வாழ்வின் 
இலக்கணமாக 
இருக்கையில் !!

Thursday, January 12, 2023

அவ்வளவே!!

அன்றைக்கும் இன்றைக்கும்
சிறு வித்தியாசம் தான்
அன்று என் இதயத்தை 
கொண்டு சென்றாய் !!
இன்று என்று இதயத்தை
கொன்று செல்கிறாய் !!
அவ்வளவே!!

பெண்ணே!!

பெண்னென பிறந்தமைக்கு பெருமைக் கொள் !!

Tuesday, January 10, 2023

வெற்றி நிச்சயம்!!

 வெற்றி நிச்சயம் ஒரு நாள்
 உன் பக்கமும் வீசும் !!! 
 நம்பு நீயும் ஜெய்த்திடுவாய் என்று!!

தொலைதூர காதல்

இடைவேளை இல்லாது இனையத்திலாது 
உன்னோடு கதைப்பது எப்போது 
என்றே காத்திருக்கிறது 
இந்த தொலைதூரக் காதல்!!

கோபம் கொள்ளாதே!!

கோபம் 
கொள்ளாதே!!
ஒரு நாள் 
ஊரறிய 
உன் கைபிடித்து 
செல்வேன்
உலகறிய 
எனத்தாகிக்
கொள்வேன்


Monday, January 9, 2023

ஈகை !!

இன்று போய் 
நாளை வா
ஈகை செய்கிறேன்
என்று யாரேனும் 
கூறினால் 
புண்ணகையித்து
கடந்து செல் 
ஏனெனில்
ஈகை செய்பவன் 
நாளை என்று
கூற மாட்டான்
இன்றே அவனால்
முடிந்ததை ஈன்றுடுவான்!!

உன் நகல்!!

மகளா ? மகனா ?
என அறிய ஆவல்
கொள்ளாமல் 
பிறப்பது 
உன்  நகலென
பெருமைக் கொள் !!


நெற்றி முத்தம்

நான்
சண்டையிடுவதே
சமாதான கொடியாக 
உன் ஒற்றை முத்தம் 
வரும் என்பதற்காக 
தானே என்றவளுக்கு
எண்ணற்ற நெற்றி 
முத்தகளைத் தந்தான்
அவள் அன்புக்குறியவன்!! 



தூது அனுப்புகிறேன்!!

தூது அனுப்புகிறேன்
தூண்டில் போட்டு
நீ தூக்கி சென்ற
என் இதயத்திற்கு
பதிலாக உன்
இதயத்தை
எனத்தாக்க !!!

Friday, January 6, 2023

பூமர்

நான் உனக்குள் வரும்வரை
காதலிப்பவர்கள் பூமராகவும்
காதலின் சேட்டைகள் கிரின்ஞாகவும் 
தெரியும் என்றது இந்த காவிய காதல்!!!