விலகிப்போ என்றேன்
விசியம் என்னவென்றாய்
வியப்படைய நீ ஏதும்
செய்யவில்லை என்றேன் !!
வித்தியாசமாக செய்து
வியப்பில் ஆழ்த்தி
விரலை பிடித்து
விலகிப்போகாதே என்று
என்னையே சொல்ல வைத்தாய்!!
உனக்கென்ன என்மேல் அவ்வளவு என்றேன் -உன் முன் எனக்கு அனைத்தும் இவ்வளவு என்றாய்!!
அப்போது புரிந்துக் கொண்டேன்
முதுமையிலும் என்னோடு நீயே
இருப்பாய் என்று!!
No comments:
Post a Comment